Tag Archives: என் எழுத்து

கடலின் நடுவில் ஒரு புள்ளி

மேகத்திற்கு மேல் சென்றுகொண்டிருந்தபோது
வெகு கீழே ஒரு புள்ளியைப்பார்த்தேன்
புள்ளி கடலின் நடுவில் இருந்ததாலும்,
மேகங்கள் சற்று இடைவெளி விட்டிருந்ததாலும்,
என்னால் அந்த புள்ளியைப்பார்க்க முடிந்தது.
புள்ளி கப்பல் என்று அழைக்கப்படுவதோ
புள்ளிக்குள் மனிதர்கள் இருந்தார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பதோ
என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை
நாத்திகர்களுக்கு ஆத்திகர்களின் கடவுள் போல‌
புள்ளி என்பதால் மேகம் எளிதாக மறைத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது
அல்லது நான் மேகத்தைத்தாண்டி சென்றுகொண்டிருந்தேன்

Posted in Poem | Also tagged | Leave a comment

அசைன்மென்ட் – சர்வேசன்500 – ‘நச்’னு ஒரு கதை 2009

கொடுத்த வேலையை நேரத்தில் செய்து முடிப்பது என் ஜீனிலேயே இல்லை. ஏன் என் குடும்ப ஜீனிலேயே இல்லை. என் அப்பாவிடம் இருந்து கடன் வாங்கிய வரிகள். ஒரு வேலை வந்தவுடன் மனது உடனே திட்டங்கள் தீட்டும் ஆனால் திட்டங்கள் வெற்றி அடைந்த வரலாறு குறைவு. Tom, Jerry-ஐ எப்போதாவது வெல்வது போல….

Posted in Story | Also tagged , | 26 Comments

கிரிவலம்

ஒவ்வொரு பௌர்ணமியும் திருவண்ணாமலைக்கு புதுசாயம் பூசுகின்றது. சாயங்கள் அனைத்தும் அவசர அவசரமாக அழிபட்டு அடுத்தநாளில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றது ஊர். ஆனாலும் கிரிவலப்பாதை எங்கும் குப்பையையும் கற்பூர மணத்தையும் அப்படியே விட்டுவிட்டு.
திருவண்ணாமலையில் இருப்போருக்கு கிரிவலநாள் ஒரு அரசியல் ஊர்வலம் நடக்கும் நாள்  போல, அவ்வளவு இடையூறுகள். ஆனால் மக்கள் அழகாக புதிய வழிகளை பின்பற்றி தங்கள் கூடுகளுக்கு திரும்புவர்.
இத்தனை திருவண்ணாமலை அனுபவங்களும் நான் அங்கு கல்லூரியில் படித்த காலத்தில் கிடைத்தன. கல்லூரி காலத்தில் நாங்கள் கிரிவலம் [...]

Posted in Story | Also tagged | 14 Comments

பின்நவீனத்துவப் பிதற்றல்

பிரபஞ்சத்தின் சூன்யவெளியில் நடந்துகொண்டிருந்தபோது,சே எங்கிருந்து வந்தது உந்த கெட்ட பழக்கம், பிரபஞ்சம், சூனியம் என்ற கெட்டவார்த்தைகள்?
மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வினோதமான முரண்களை கடக்க நினைக்கையில்,எங்கிருந்தோ வந்து தெறிக்கிறது எப்போதோ மன்னித்துவிட்டு வந்த நம்பிக்கைதுரோகத்தின் கடைசி பிசிறு
வரைமுறைக்குள் செல்ல நினைத்து சாலை கடக்கையில்,வந்து முகத்தில் அறைந்து உமிழ்ந்து செல்கிறான், எதிர் பக்க பாதசாரி.நன்றி திரு.பாதசாரி
மனதின் வலி மனதை தேடும் தேடலில் கலந்துவிடுகின்றது
எல்லாவற்றையும் கடந்து காசிக்கு செல்ல நினைக்கையில்முதுகில் அடிக்கிறான் நான் கடவுள் ஆர்யா
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் [...]

Posted in Poem | Also tagged | 4 Comments

கைமாறிய காதலி

5 நிமிட ரயில் தூரத்தில் இருந்தாலும் தினமும் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் எப்படி இல்லையோ அதே போல் அடிக்கடி பார்க்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நானும் ஜெய்யும் அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை.
இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். சிங்கப்பூர் வந்தும் கூட அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை. எப்போதாவது பியர் அடிக்க ஒன்று கூடுவதுண்டு. கல்லூரியில், பசங்களுடன் நான் படத்திற்கு சென்றால், அதே ஷோவில் ஏதேனும் ஒரு கல்லூரி பெண்ணுடன் ஓரசீட்டில் உட்கார்ந்து இருப்பான். எல்லோருக்கும் இந்த மச்சம் வாய்ப்பதில்லை.
இந்த ஜெய் [...]

Posted in Story | Also tagged | 16 Comments